நாளெல்லம் காத்திருப்பு..
பட்டயம் படிக்க
போன மகன்..
தினம்
பசியோட வீடு திரும்ப..
மத்தியானம் ஆக்கிவச்ச
சுடுசோறும் புளித்தண்ணியும்
அறைச்சுவச்ச துவையலும்
எடுத்துவச்சு
வாசலிலே காத்திருப்பு..
அஞ்சு மணி பஸ்க்காக..
சித்திரை மாச
மழை கணக்கா..
வந்த
ரெண்டுமணி பஸ்ல..
காரணம் ஏதும் சொல்லாம
தண்ணிபட்ட வேட்ட போல
முடங்கியிருந்த என் மகராசா..
மூணாம் பருவ ஃபீஸ் கட்ட
பதினெட்டாயிரம் குறிச்சி வந்த..
கடைசி தேதி வந்துருச்சோ
முடங்கியிருந்த என மகராசா..
நோவா கண்ட சக்ரவர்த்தி
வீட்ட தாங்கும் பெண்ணொருத்தி..
தங்க நகை வெள்ளி நகை
வித்து வித்து
வாழ்க்கை நடத்தி..
பெத்த மகன படிக்க வைக்க
பொன்னும் இல்ல பொருளும் இல்ல..
கல்யாணம் கட்டிவந்த காலத்துல..
சீருசெஞ்ச வெங்கல பானை..
பொங்கல் வச்சதில்ல ஒருநாளும்!
பன்டுபாத்திரம் அத்தனைக்கும்
இனிமே வேலை இல்ல வீட்டில
பிள்ளை படிக்க தான்
அத்தனையும்..
மிச்சமிருந்த
கம்மலும்
சேர்த்து கொண்டுபோன
அடகுவைக்க....
மொத்தமா வைக்குறியே
சொந்தமா களவா?...
உரசிப்பார்த்த கடக்காரன்
கேட்ட கேள்வி
தாங்கி நின்ன..
தள்ளி நின்ன நானோ
துடிச்சுபோனேன்
ஒடிஞ்சுபோனேன்..
நல்லா வாழ்ந்த
வாழ்க்கையிலும்..
நல்லா இல்லா
வாழ்க்கையிலும்..
தெய்வமில்ல வேற..
என்சாமி நீதானே
தேவையில்ல வேற...!
No comments:
Post a Comment