வாரம் முழுக்க ஸ்கூல்தான்
அம்மாவுக்கும் வேலைதான்..
ஊருசனம் அத்தனைக்கும்
ஒரேஒரு வழக்கம்தான்..
சாயங்காலம் வந்ததும்
தெருவிளக்கு வெளிச்சத்துல
குச்சிநிரம்ப காடிபெட்டி
மேல அடுக்கிவச்ச சக்கையும்
தண்டவாள ரயில்போல
குச்சிவைக்கும் சக்கையும்
கோர்க்க கோர்க்க கோபுரமா..
எங்க சனம் அத்தனைக்கும்
தெனந்தோறும் வழக்கமா..!
வாரக்கடைசிய பார்த்துதான்.
வந்த..
சனிக்கிழமை சம்பளம்போட
அஞ்சுரூபா மேகியில
மொத்தகுடும்பம் ருசிபாக்கும்,
எங்கம்மா சாமி
என்ன பாத்தே பசியாறும்!
No comments:
Post a Comment