Tuesday, 24 March 2020

பேரணை

பெருவெள்ளம் 
தடுக்கும் பேரணை 
நன்று!

பேரணையின் வலியோ
காட்டாற்று அழுத்தம்கண்டது..
காடு மலை சோலை
கண்டு வந்த நதியோ
மரம்மென்ன மலரென்ன 
பேதமின்றி மோத..
எதிர்த்து நின்ன 
யாவரையும் 
தன்னுள்ளே அடக்கித்தான்
நெடுந்தூரம்  குளிர்வித்து
மண்ணெல்லாம் உயிர்ப்பித்து
செல்லுமிடம் அறிந்திடாமல் 
செய்தபலன் பெற்றிடாமல்
உனக்கான வழியும்
உன்னாலே உண்டாச்சு!
மாறாப் புன்னகையும் 
விடையில்லா வாழ்க்கையும்
எப்போதும்
புதிர்தான்.
அரிதாய்வரும் 
பேரலையும் 
ஊடலாய் மோத..

அத்தனையும்
எதிர்ப்பார்த்து
எதிர் பார்த்து
தடுக்கும் பேரணையும்
நன்று!

பெருவெள்ளம்
தடுக்கும் பேரணை
நன்று!








No comments:

Post a Comment