கட்டைஅடுக்குன காசுல
குருவிபோல சேர்த்துகொஞ்சம்
வாரத்தவணை செலுத்திகொஞ்சம்
அரும்புமீசை இராசாவுக்கு
புதுக்கைலி வாங்குன..
முளைக்காத மீசையத்தான் முறுக்கிவிட்டு
கஞ்சிபோட்ட கைலியத்தான் மடிச்சுகட்டி
பவுசா நா நடந்துவர..
கன்னத்துல கையவைச்சு நீபாக்கும்போதும்,
தென்பாண்டி நாட்டுக்குத்தான்
அரசனாகிப் போனேன்!!
No comments:
Post a Comment