ஊரோரம் கிடைச்ச இடம்..
கிடைச்ச இடமும் கோட்டாவுல
எல்லாருக்கும் பிடிச்சாலும்
பெருமையா பேசுனாலும்
வரலாறு இல்ல
இருக்கப்போவதும் இல்ல..
காவக்காத்து இருக்கனும்.
நீ காவக்காத்து இருக்க ..
பெரிய வயித்து பிள்ளையும்
வில்லுக்கார அண்ணன் தம்பி
இங்க வந்து குடியேறி
மாறிப்போன
பண்ணையாரா..
கட்டுக்கத மாயக்கத
பூலோகம் அளந்த கத
சுட்டெரிக்கும் வின்னவன
நல்லரவன் முழுங்கும் கத
கேட்டு கேட்டு
பழகிப்போகி
செய்யும் தொழில
இனமெனப் பாத்து
காவக்காக்க விட்டாச்சு..
மாயாண்டி சடையான்டி
முனியாண்டி
பேச்சியம்மா
காட்டுக்குள்ள விட்டாச்சு..
கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்ல
என்னைக்குமே கோட்டாவுல
கடவுள்தான் சத்தியமா
ஆனாலும் ஃஎப்சி இல்ல...!
No comments:
Post a Comment