மழைக்காலம் வந்துபோகும்..
பஞ்சம் போக்க பெஞ்சதில்ல
பட்டினியும் போட்டதில்ல..
மத்த நேரம் வாழ்க்கையும்
இப்படிதான் போகுது!
அந்தியில முழிச்சு,
பைபாஸ் பக்கம் குழாயடி..
அப்பா முந்திக்கொண்டு போக
வரிசை வச்ச குடமெல்லாம்
வானவில்லா அணிவகுக்கும்..
பெடல் எட்டாத சைக்கிளும்
சணல் கயிறு அந்துடாம
பின்சாக்கு பாவம் பாக்கும்..
தூக்குத்தண்டனை கைதிபோல
தொங்க விட்ட ரெண்டுகுடம்
மேடு பள்ளம் தாண்டி
சிந்தாம வீடு சேர..
அக்காவும் அம்மாவும்
தொட்டி அண்டா
கழுவி வச்சு காத்திருக்க..
மத்தகுடத்த அப்பாவும்
குடுக்க குடுக்க
அடிச்சு வைக்க..
இப்படியா ஏழு நடை
நிரப்பிவச்சா போதும்
தீப்பெட்டி ஆபிஸ் ரேடியோல
எட்டு மணி சேதி !!!
No comments:
Post a Comment