மெய்யில்லா பொழுதும்
இதுவும்
நில்லாமல் நீள..
நீயில்லா நானோ
வாடாமல் வாட..
காணும் யாவும்
வண்ணப்பிழையாய்..
கைஎட்டும் தூரம்
இருந்தும்
கைகள் நீளவில்லை..
உனை தீண்ட கரங்கள்
துடித்திடவே..
ஏனோ தடுக்கும்
ஏதோ குழப்பம்..
விடையொன்று தேட
உலாவும் மனது
வினாவின்றி விடையேது?!
மொழிபேசா கிள்ளை
சத்தமிடும் பொருளோ
பசியோ வலியோ
பயமோ???..
பொருளறியா
பொருளுணறா
தவிக்கும் தாயின்
நிலையோ என்னிலை..
பக்குவம் என்றே
இறுகிப்போய்..
இறுக்கம் கொண்டே
இழப்பது வழக்கம்..
இருப்பதும்
தன்னை
வெறுப்பது வழக்கம்..
நிகழ்விலும்
வெளிக்கொணரா
விருப்பமும்
ஏக்கம் கொண்டே
நீர்த்துப்போகும்.
பழகிப்போன மனமும்
சிறுநகையாய்
சுகமாய் உணரும்.
நீயும்
உடனில்லா நாளும்
நானோ
No comments:
Post a Comment