Tuesday, 24 March 2020

பேரணை

பெருவெள்ளம் 
தடுக்கும் பேரணை 
நன்று!

பேரணையின் வலியோ
காட்டாற்று அழுத்தம்கண்டது..
காடு மலை சோலை
கண்டு வந்த நதியோ
மரம்மென்ன மலரென்ன 
பேதமின்றி மோத..
எதிர்த்து நின்ன 
யாவரையும் 
தன்னுள்ளே அடக்கித்தான்
நெடுந்தூரம்  குளிர்வித்து
மண்ணெல்லாம் உயிர்ப்பித்து
செல்லுமிடம் அறிந்திடாமல் 
செய்தபலன் பெற்றிடாமல்
உனக்கான வழியும்
உன்னாலே உண்டாச்சு!
மாறாப் புன்னகையும் 
விடையில்லா வாழ்க்கையும்
எப்போதும்
புதிர்தான்.
அரிதாய்வரும் 
பேரலையும் 
ஊடலாய் மோத..

அத்தனையும்
எதிர்ப்பார்த்து
எதிர் பார்த்து
தடுக்கும் பேரணையும்
நன்று!

பெருவெள்ளம்
தடுக்கும் பேரணை
நன்று!








Friday, 13 March 2020

Reservation Quota

பல ஆண்டு காத்திருந்து
ஊரோரம் கிடைச்ச இடம்..
கிடைச்ச இடமும் கோட்டாவுல
எல்லாருக்கும் பிடிச்சாலும்
பெருமையா பேசுனாலும்
வரலாறு இல்ல
இருக்கப்போவதும் இல்ல..
காவக்காத்து இருக்கனும்.
நீ காவக்காத்து இருக்க ..
பெரிய வயித்து பிள்ளையும்
வில்லுக்கார அண்ணன் தம்பி
இங்க வந்து குடியேறி
மாறிப்போன
பண்ணையாரா..
கட்டுக்கத மாயக்கத
பூலோகம் அளந்த கத 
சுட்டெரிக்கும் வின்னவன
நல்லரவன் முழுங்கும் கத
கேட்டு கேட்டு 
பழகிப்போகி
செய்யும் தொழில
இனமெனப் பாத்து
காவக்காக்க விட்டாச்சு..
மாயாண்டி சடையான்டி
முனியாண்டி
பேச்சியம்மா
காட்டுக்குள்ள விட்டாச்சு..
கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்ல
என்னைக்குமே கோட்டாவுல
கடவுள்தான் சத்தியமா
ஆனாலும் ஃஎப்சி இல்ல...!



Thursday, 12 March 2020

முதல் கைலி

கட்டைஅடுக்குன காசுல
குருவிபோல சேர்த்துகொஞ்சம்
வாரத்தவணை செலுத்திகொஞ்சம்
அரும்புமீசை இராசாவுக்கு
புதுக்கைலி வாங்குன..
முளைக்காத மீசையத்தான் முறுக்கிவிட்டு
கஞ்சிபோட்ட கைலியத்தான் மடிச்சுகட்டி 
பவுசா நா நடந்துவர..
கன்னத்துல கையவைச்சு நீபாக்கும்போதும்,
தென்பாண்டி நாட்டுக்குத்தான்
அரசனாகிப் போனேன்!!

Monday, 10 September 2012

சொல்லாத வார்த்தைகள் சொர்க்கத்தில்


சொல்லாத வார்த்தைகள் சொர்க்கத்தில்...!


ஒருவன்...
அவளுக்கான ஒருவன்...
நெஞ்சோடும் உயிரோடும்
விளையாடும் காதலுடன்..
மனதில்
என்றென்றும் தயக்கமுடன்..!

தமிழே தமிழே
எந்தன் மொழியாயினும்,
இனிக்க இனிக்க
பேசியதெல்லாம்..
அழைபேசி
கேட்டதெல்லாம்..
குறைவுதான் மொத்தத்தில்....
என்றும்
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!


என்றும்
என்றென்றும்
என் மனதோடு மட்டும்
ஒலிக்கின்ற வார்த்தைகள்..
என்செவி மட்டும்
உணர்கின்ற வார்த்தைகள்..
பிறர் அறியாத
வெளியுலகம் பாரத்திடாத வார்த்தைகள்..
தவம் கிடந்து
தவித்தேனும்
இதழ்கள் அடையா வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்..!

கல்லூரி
அறிமுகநாளின்
அறிமுகத்திலும்..
உன்னை
அறிந்துகொள்ளும்
ஆர்வத்திலும்..
வகுப்பு பாடம்
நோக்காமல்,
வருகைப்பதிவேட்டை
கவனித்தேன்..!
உன் பெயர் வருகைக்காக...

தினம்தினம்
உணரும் சுகமது!
சொல்லில்
அடங்கா சுகமது!
இன்றும்
சொல்லக் கிடைக்காத பதமது!!
என்றும் உனக்காக
காத்திருக்கும் வார்த்தைகள்..
உனக்கான வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!

கதிரவனும்
கண்விழிக்கா வேளையிலும்
உன்
காலைவணக்க குறுஞ்செய்தி!
யாரும் அறியாமல்
சிரித்திட்டேன்..
உச்சரித்த சொற்களை
உன்னிடம் மறைத்திட்டேன்..
என்
இதய தோட்டத்தில்
அன்றும்
வசந்தகால பூக்களாய்..
உதிராமல் குலுங்கும்
உனக்கான வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!


எளிதில் சென்றிடுவாய்
சண்டையிட்டு..
இருந்தும் பேசிடுவாய்
எனை காக்கவைத்து..
உன்
அர்த்தமில்லா கோபம்!
அழகான கோபம்!
என்னை கொல்லுதடி..
போதும்!


இந்தமுறை,
எனக்கான முறை..
கோபமொன்று உன்மேல்
படத்தான்
முடிவெடுத்தேன்..!
என்ன செய்வது?
உன் சிரிப்பினின்றும்
சின்னதாய் sryயினின்றும்
குளிர்ந்துவிடுகிறேன்...!
அந்த நொடியும்
அழைக்கின்றன..
உனக்கான வார்த்தைகள்...


மாலை நேரத்தில்
மரத்தடியில்,
மரத்தின்
இலையோர இடைவெளியில்..
என்
தொலைதூர பார்வையின்
விளிம்பில்..
உன்
ஒய்யார நடையழகில்....!
ம்ம்ம்...
என்ன சொல்ல பெண்ணே..
விடுதலை கேட்டு
துடிக்கின்றன..
உனக்கான வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்..
என்றும் அவை
சொர்க்கத்தில்...!


ரயில்பயணம்
எனக்கு சிறப்புதான்!
அழைபேசியில்
நாம் உரையாடும்போது...
அன்றும்
உச்சரித்த சொற்கள்
காற்றோடுதான்..
உதிராத சொற்கள்
என்மனதோடு..
உனக்காக..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!


பருக்காலத் தேர்வும்
பயத்தால் நீ
பதறி அழும்போதும்
உள்ளத்தில்
குமுறும் வார்த்தைகள்..
உனக்கான வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!



இவையாவும் சொல்லிவிடவில்லை
சொல்லிடும் நாளும்
வெகுதொலைவில் இல்லை..
உலகம்
ஒருநாள் அழியும்!
உடலும்
ஒருநாள் அழியும்!!

எனவே
இறுதியாக..
இதுவே
என்சொற்களின்
backup ஆக..!